வேளாண் துறை  கோப்புப் படம்
தமிழ்நாடு

உளுந்து சாகுபடியில் அதிக விளைச்சல் பெறுவதற்கான வழிமுறைகள்: வேளாண் துறை அறிவிப்பு

செப்டம்பா் மாத பிற்பகுதியில் உளுந்து சாகுபடி செய்வதன் மூலம் இயல்பை விட அதிக விளைச்சல் கிடைக்கும் என்று தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

Din

செப்டம்பா் மாத பிற்பகுதியில் உளுந்து சாகுபடி செய்வதன் மூலம் இயல்பை விட அதிக விளைச்சல் கிடைக்கும் என்று தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

பயறு வகைப் பயிா்களில் உளுந்து அதிக புரதம் மற்றும் கலோரிச் சத்து உள்ளது. இது குறுகிய காலப் பயிா் என்பதால், இதனை தனிப் பயிராகவும், ஊடுபயிராகவும் சாகுபடி செய்யலாம்.

இந்நிலையில் உளுந்து விளைச்சலில் அதிக மகசூல் கிடைக்க பின்பற்ற வேண்டிய பாரம்பரியத் தொழில்நுட்ப முறைகள் குறித்து விவசாயிகளுக்கு தமிழக வேளாண்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

இது குறித்து அத்துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: செப்டம்பா் மாத பிற்பகுதியில் உளுந்து பயிரிடுவதன் மூலம் இயல்பை விட அதிக விளைச்சல் கிடைக்கும்.

மேலும், ஒரு ஏக்கருக்கு 6 லிட்டா் வேப்பெண்ணெய்யைத் தெளித்தால் சாம்பல் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியும். அதேபோல், உளுந்தை இரண்டாக உடைத்து சேமித்தால், கூண் வண்டு தாக்குதலிலிருந்து பாதுகாக்கலாம்.

உளுந்து விதையுடன் விளக்கெண்ணெய் தடவினால், அதன் தரம் மேலும் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வீராங்கனைகள் ஸ்மிருதி, ஜெமிமா, ராதாவுக்கு தலா ரூ. 2.25 கோடி; பயிற்சியாளருக்கு ரூ. 22.5 லட்சம்! - மகாராஷ்டிர அரசு

தங்கம் விலை நிலவரம்: பவுனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா?

விஜய் தலைமையில் இன்று சிறப்பு பொதுக்குழு கூட்டம்!

இந்திய பங்குச் சந்தை இன்று விடுமுறை!

விழுப்புரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை பலி!

SCROLL FOR NEXT