தமிழ்நாடு

திருத்தணி: போலியோ சொட்டு மருந்து முகாமினை துவக்கிவைத்தார் அமைச்சர் ஆர். காந்தி!

DIN

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்துள்ள ஆர்கே பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இன்று காலை 8 மணிக்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாமினை துவக்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் ச.சந்திரன், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் க. கீதா, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.பிரியா ராஜ், அம்மையார்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி செங்குட்டுவன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 3) நடைபெறவுள்ள போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமில், 5 வயதுக்குட்பட்ட 57.84 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் போலியோவை (இளம் பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக ஆண்டு தோறும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சோ்ந்துள்ளது. அதனால், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் பேருந்து சேவையை தொடங்குகிறது ‘ஊபர்’ நிறுவனம்

வைகாசி மாதப் பலன்கள் - விருச்சிகம்

தமிழில் ரீ-மேக்காகும் ஹிந்தி தொடர்! ஜோடி யார் தெரியுமா?

பிகார்: தேர்தல் வன்முறையில் ஒருவர் சுட்டுக் கொலை

வைகாசி மாதப் பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT