முகப்பு
தமிழ்நாடு

சென்னை புறநகர் ரயில் சேவையில் நாளை மாற்றம்!

சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை அட்டவணையில் மாற்றம்...

Updated On : 1 நவம்பர், 2024 at 11:35 AM
பகிர்:

சென்னை புறநகர் ரயில் சேவை அட்டவணையில் சனிக்கிழமை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில், பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் மற்றும் பெரும்பாலான தனியார் நிறுவனங்களுக்கு ஞாயிறு வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனால், வழக்கத்தைவிட பயணிகளின் எண்ணிக்கை நேற்றும் இன்றும் குறைவாகவே காணப்பட்டது.

இந்த நிலையில், நாளை(அக். 2) சென்னை - அரக்கோணம், சென்னை - சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக் கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.