FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இ-பாஸ் சோதனை தீவிரம்: கல்லார் சோதனைச் சாவடியில் காத்திருக்கும் வாகனங்கள்!

இ-பாஸ் சோதனை தீவிரப்படுத்தப்பட்டதால் கல்லார் சோதனைச் சாவடியில் காத்திருக்கும் வாகனங்கள்!

Updated On : 9 நவம்பர் 2024, 3:57 pm IST
கல்லார் சோதனைச் சாவடி
பகிர்:

நீலகிரி நுழைவாயிலான கல்லார் சோதனைச் சாவடியில் இ -பாஸ் சோதனை தீவிரமடைந்திருப்பதால் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன.

நீலகிரி மாவட்டத்துக்குள் செல்ல இ-பாஸ் வைத்திருக்கிறார்களா என்ற சோதனைக்குப் பின்னரே மாவட்டத்திற்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இதனால் நீண்ட தூரம் வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன வாகனங்கள் .

நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளுக்குச் செல்ல இ-பாஸ் கட்டாயம் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில் கடந்த மே மாதத்தில் இருந்து தற்போது வரை இந்த இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்து வரும் நிலையில் நேற்றைய தினம் இ-பாஸ் நடைமுறையை நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகங்கள் சரியான முறையில் பின்பற்றாததால் தொடர்ந்து மலைப்பகுதியில் வாகன எண்ணிக்கைகள் அதிகமாக இருப்பதாக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

இதையடுத்து ஏற்கனவே இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்து வரும் நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளில் இ-பாஸ் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நீலகிரி மாவட்ட நுழைவாயிலான மேட்டுப்பாளையம் வழியாக நாள்தோறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்.

இதையடுத்து சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் மேட்டுப்பாளையம் அடுத்து உள்ள கல்லார் சோதனை சாவடியில் இ-பாஸ் பதிவு செய்துள்ளதா என தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சோதனை சாவடிகளில் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments