பிரதி படம் 
தமிழ்நாடு

புதுக்கோட்டை அருகே காரிலிருந்து ஐந்து உடல்கள் மீட்பு: தற்கொலையா?

புதுக்கோட்டை அருகே காரிலிருந்து ஐந்து உடல்கள் மீட்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நமனசமுத்திரத்தில், சாலையோரம் நின்றிருந்த காரில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம் நமனசமுத்திரத்தில், சாலையோரம் ஒரு கார் நின்றிருந்ததைப் பார்த்த பொது மக்கள் காவல்நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.

காவல்துறையினர் விரைந்து வந்து பார்த்ததில், காருக்குள் ஐந்து பேர் சடலமாக இருப்பதைக் கண்டறிந்து உடனடியாக, தடயவில் மற்றும் மருத்துவ நிபுணர்களை வரவழைத்தனர்.

முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு, அவர்களது உடல்கள் உடல் கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த ஐவரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது. இவர்கள் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உண்மை ஒன்றுதான்

தமிழ்நாட்டுத் தேர்தல்கள்

சினிமா ஸ்டார்ட்...கேமரா...ஆக்ஷன்... ரிலீஸ்!

அபாயத் தூரிகை (நாவல்)

எரிவதில் எண்ணெய் ஊற்றுகிறதா ரஷியா! இந்தியாவுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய்!

SCROLL FOR NEXT