நடிகர் விஜய் மீது காலணி வீச்சு: காவல் நிலையத்தில் புகார்
நடிகர் விஜய் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த நடிகர் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த விஜய் சென்றார்.
பின்னர், அங்கிருந்து அவர் கிளம்பிச் செல்ல வெளியேறியபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் விஜய் மீது காலணியை வீசினார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: சந்திரசேகா் ராவை சந்தித்து நலம் விசாரித்தார் ஜெகன்மோகன் ரெட்டி!
இந்த நிலையில், நடிகர் விஜய் மீது காலணி வீசியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தென்சென்னை மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.