FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தச்சன் குறிச்சிக்கு ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஆர்வமுடன் வந்த திருநங்கை!

தச்சன்குறிச்சியில் சனிக்கிழமை நடைபெறும் போட்டிக்கு ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஆர்வமுடன் வந்த திருநங்கை ஐஸ்வர்யாவை அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

Updated On : 6 ஜனவரி 2024, 11:06 am IST
தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஆர்வமுடன் வந்த திருநங்கை ஐஸ்வர்யா.
பகிர்:


கந்தர்வகோட்டை: தமிழகத்தில் நிகழாண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி புதுக்கோட்டை மாவட்டம், தச்சன்குறிச்சியில் சனிக்கிழமை நடைபெறும் போட்டிக்கு ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஆர்வமுடன் வந்த திருநங்கை ஐஸ்வர்யாவை அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும். இதன் தொடக்கமாக, புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே தச்சன்குறிச்சி கிராமத்தில் முதல் போட்டி நடைபெறுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டுக்கான முதல் போட்டி தச்சன்குறிச்சியில் சனிக்கிழமை நடைபெற்று வருகிறது. 

இந்த ஜல்லிக்கட்டு தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் திருநங்கையான ஐஸ்வர்யா, தமிழ் கலாசாரத்தின் மீது பற்றாலும், ஜல்லிக்கட்டு ஆர்வத்தாலும் நான்கு ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருவதாகவும், தற்போது தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியான தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டிற்கு  தனது இரண்டு காளைகளை கலந்து கொள்ள வைப்பதற்காக தேனியில் இருந்து 5 மாடுபிடி வீரர்களுடன் ஜல்லிக்கட்டுக்கு வந்துள்ளார். இவரிடம் நான்கு ஜல்லிக்கட்டு காளைகள் உள்ளதாகவும் கடந்தாண்டு ஜல்லிக்கட்டில் இவரது காளைகள் 28 முறை களம் கண்டுள்ளதாகவும், அவரது காளைகளை மாடுபிடி வீரர்கள் சுலபத்தில் பிடிக்க முடியாது எனவும், சீறி பாய்ந்து வாடி வாசலை அலறவிடும் காளைகள் என திருநங்கை ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். 

ஆர்வமுடன் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள காளையுடன் வந்த திருநங்கை ஐஸ்வர்யாவை அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments