முகப்பு
தமிழ்நாடு

ஆளுநர் மதியம் வருகிறார், பெரியார் பல்கலை.யில் முறைகேடு புகார் சோதனை!

பெரியார் பல்கலைக்கழகத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று வருகை தரவுள்ள நிலையில், அலுவலக வளாகத்தில் மாநகரப் போலீஸ் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On : 11 ஜனவரி 2024, 11:52 am IST
பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர்
பகிர்:

சேலம்: பெரியார் பல்கலைக்கழகத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று வருகை தரவுள்ள நிலையில், அலுவலக வளாகத்தில் மாநகரப் போலீஸ் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரசின் அனுமதியின்றி தனியார் நிறுவனம் தொடங்கி மோசடியில் ஈடுபட்டதாக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

மேலும், பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேல், பேராசிரியர்கள் சதீஷ் ராம், கணேஷ் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். 

Advertisement

Advertisement

 பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஏழு இடங்களில் கடந்த டிசம்பர் 28-ம் தேதி 21 மணி நேரத்துக்கு மேலாக போலீசார் சோதனை நடத்தினர். 
இதற்கிடையே பெரியார் பல்கலைக்கழகத்தின் அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பல்கலைக்கழகத்துக்கு இன்று மதியம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தரவுள்ளார்.

இந்த நிலையில் பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் 5 இடங்களில் சேலம் மாநகர காவல் துறையினர் இன்று காலை மீண்டும் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.

மேலும், குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள துணை வேந்தரை ஆளுநர் சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியே மாணவர் அணியினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் பல்கலைக்கழகம் முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments