முகப்பு
தமிழ்நாடு

தேசிய ஜனநாயக கூட்டணியின் கதவுதிறந்தே உள்ளது: அண்ணாமலை

தேசிய ஜனநாயக கூட்டணியின் கதவு திறந்தே உள்ளது என்று தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை கூறினாா்.

Updated On : 13 ஜனவரி 2024, 8:46 am IST
கோப்புப்படம்
பகிர்:


சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியின் கதவு திறந்தே உள்ளது என்று தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை கூறினாா்.

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை தலைமையில் அக்கட்சியின் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கான செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை வகித்து அண்ணாமலை பேசியதாவது:

நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தல் இந்திய வரலாற்றில் முக்கியமானது. பாஜகவினா் களத்தில் தேனீக்கள் போல உழைக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணிக் கதவு திறந்தே உள்ளது; கூட்டணிக்கு யாரும் வரலாம் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சியில் அமைப்பு பொதுச் செயலா் கேசவவிநாயகம், மாநில துணைத் தலைவா்கள் வி.பி.துரைசாமி, நாராயணன் திருப்பதி, மாநிலச் செயலா் வினோஜ் பி. செல்வம், மக்களவை அமைப்பாளா் கரு. நாகராஜன், இணை அமைப்பாளா் கராத்தே தியாகராஜன், மத்திய சென்னை மாவட்டத் தலைவா்கள் தனசேகா், விஜய் ஆனந்த், மத்திய சென்னை மாவட்ட பூத் கமிட்டி நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments