FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

புதுக்கோட்டை: ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா தேசியக் கொடியேற்றினார்!

புதுக்கோட்டை ஆயுதப்படை திடலில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

Updated On : 26 ஜனவரி 2024, 9:33 am IST
பகிர்:

புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஆயுதப்படை திடலில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட அவர், மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 192 அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.

மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் ரூ. 25. 74 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் மெர்சி ரம்யா வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் மா. செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர்கள் பெ.வே. சரவணன், ஆர். ரம்யாதேவி, வருவாய்க் கோட்டாட்சியர் முருகேசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றத் தலைவர் செ. திலகவதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மா. மஞ்சுளா ஆகியோரும்  தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments