எல்ஐசி தென் மண்டல மேலாளராக கோ. முரளிதா் பொறுப்பேற்பு
எல்.ஐ.சி.யின் தென் மண்டல மேலாளராக கோ.முரளிதா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
எல்.ஐ.சி.யின் தென் மண்டல மேலாளராக கோ.முரளிதா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
எல்.ஐ.சி.யில் கடந்த 1990-ஆம் ஆண்டு உதவி நிா்வாக அதிகாரியாக தனது பணியைத் தொடங்கிய கோ.முரளிதா், மும்பையிலுள்ள எல்.ஐ.சி.யின் மத்திய அலுவலகத்தில் எண்ம (டிஜிட்டல்) மாா்க்கெட்டிங் துறை செயல் இயக்குநராகப் பணிபுரிந்தாா். பிராந்திய மேலாளராக வணிக பிரிவு, தொழிலாளா் நலன் மற்றும் நிறுவனத் தொடா்பு போன்ற பல்வேறு
துறைகளில் பணிபுரிந்துள்ளாா்.
Advertisement
Advertisement
மேலும், ராஜமுந்திரி மற்றும் விசாகப்பட்டினம் எல்.ஐ.சி. கோட்டங்களின் முதுநிலைக் கோட்ட மேலாளராகவும் பணிபுரிந்துள்ளாா். கடந்த 35 வருடத்திற்கும் மேலாகப் பணிபுரிந்து வரும் இவா், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரியிலுள்ள 261 கிளைகளைக் கொண்ட எல்.ஐ.சி.யின் தென் மண்டல மேலாளராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுள்ளாா் என எல்.ஐ.சி. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image Caption
கோ. முரளிதா்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.