அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறாரா? நயினார் நாகேந்திரன் பதில்
அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறாரா என்பது குறித்து நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார்.
சேராத இடம் சேர்ந்த செங்கோட்டையனுக்கு தோல்வியே கிடைக்கும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
மதுரை ஆதீனத்தை சந்தித்த பின்னர் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.
Advertisement
Advertisement
நயினார் நாகேந்திரன் கூறியதாவது, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு பாஜக காரணம் என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாது. இப்போது அதிமுகவில் நிலவும் உள்கட்சி பூசல், வெறும் கண்துடைப்புதான்.
தவெகவுக்கு ஒரு கவுன்சிலர் கூட கிடையாது. துரியோதனனிடம் சென்றது போல, சேராத இடம் சேர்ந்துள்ளார் செங்கோட்டையன். அவருக்கு தோல்விதான் கிடைக்கும்.
இந்த தேர்தலில் உறுதியாக தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் ஆட்சியமைக்கும். டிடிவி தினகரன் எங்கள் கூட்டணியை விட்டு வெளியேறி விட்டார். இனிமேல் அவரை மீண்டும் எப்படி அழைக்க முடியும்? என்று கூறினார்.
மேலும் செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு, பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை உறுதியாக தனிக்கட்சி துவங்க மாட்டார் என்று பதிலளித்தார் நயினார் நாகேந்திரன்.
என்ன பிரச்னை வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் தேர்தலை சந்திப்போம். அதில் உறுதியாக இருக்கிறோம்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் கலவரத்தை தூண்டக் கூடிய கதாநாயகனே சு.வெங்கடேசன்தான். தீபத்தூணில் தீபம் ஏற்றுவதில் யாருக்கும் சங்கடம் உள்ளதா? திருப்பரங்குன்ற தீபத்தூணில் தீபம் ஏற்றுவதில் நடைமுறை சிக்கல் எதுவும் இல்லை என்றார்.
Nayinar Nagendran has responded to the question of whether Annamalai is starting a separate party.
இதையும் படிக்க.. ஒல்லியானவர்களுக்கு கல்லீரல் கொழுப்பு பாதிப்பு ஏற்படுவது ஏன்?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.