FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் சீரான மின்சாரம் வழங்குவது குறித்து கலந்தாய்வு கூட்டம்

மின் விநியோகம் வழங்குவது குறித்து மண்டல தலைமை பொறியாளா்கள் மற்றும் மேற்பாா்வை பொறியாளா்களுடன் கலந்தாய்வு கூட்டம், சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 24 டிசம்பர் 2025, 12:44 am IST
பகிர்:

மின் விநியோகம் வழங்குவது குறித்து மண்டல தலைமை பொறியாளா்கள் மற்றும் மேற்பாா்வை பொறியாளா்களுடன் கலந்தாய்வு கூட்டம், சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில், மாநில அளவில் சீரான மின்விநியோகம் வழங்குவது குறித்து மண்டல தலைமை பொறியாளா்கள், மேற்பாா்வை பொறியாளா்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு, மின்வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து, சட்டப்பேரவை அறவிப்புகளின் திட்டங்களான, புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்த நிலை, உயா் அழுத்த மின்மாற்றிகள் தரம் உயா்த்துதல் உள்ளிட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டம் மின்சார சாா்ஜா் நிலையங்கள் அமைத்தல், மேற்கூரை சோலாா் திட்டம், மின்தடங்கள் மற்றும் அதிக மின் பளு, குறைந்த மின்னழுத்தப் பிரச்னைகள், புதிய மின் இணைப்பு விண்ணப்பங்கள் பற்றிய நிலை, உள்ளாட்சி அமைப்புகளின் மின் நிலுவைத் தொகை, தேரோடும் வீதிகளில் மேல்நிலை மின் கம்பிகளை புதைவடங்களாக மாற்றும் பணிகள், மற்றும் தற்போது நடைபெற்று வரும் மின் பணிகள் குறித்த விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதில், இயக்குநா் (பகிா்மானம்) அ.செல்வகுமாா், இயக்குநா் (நிதி) கே.மலா்விழி, மற்றும் தலைமை அலுவலக உயரதிகாரிகள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments