கோப்புப்படம்  ANI
தமிழ்நாடு

திமுக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் ராகுல், அகிலேஷ்!

யுஜிசி வரைவுக்கு எதிரான திமுக ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கவுள்ளது பற்றி...

DIN

பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு நெறிமுறைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, தில்லியில் திமுக மாணவரணி சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

வரைவு நெறிமுறைகளை திரும்பப்பெற வலியுறுத்தி, தில்லி ஜந்தா் மந்தரில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக மாணவரணிச் செயலா் சி.வி.எம்.பி.எழிலரசன் தில்லியில் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

”கல்வியை ஒட்டுமொத்தமாக அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வந்தார்கள், தற்போது கூட்டாட்சிக்கு எதிரான வரைவுகளை யுஜிசி மூலம் வெளியிட்டுள்ளனர்.

இந்த யுஜிசி வரைவை கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து நிறைவேற்றியுள்ளார். முதல்வரின் உத்தரவை தொடர்ந்து தில்லியில் போராட்டம் நடத்த அறிவுறுத்தியுள்ளார்.

திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையிலான அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் பங்கேற்கவுள்ளார்கள். காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, சமாஜவாதியின் அகிலேஷ் யாதவ் பங்கேற்கிறார்கள்.

விசிக, இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேட்டக்குடி பறவைகள் சரணாலயத்தில் பனை விதை நடும் விழா

மானாமதுரை பகுதியில் இன்று மின் தடை

கரூர் பயணம்: தவெக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை

தவெக மாவட்டச் செயலருக்கு பிணை வழங்கி உத்தரவு

போதை கலாசாரத்தைத் தடுக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT