தமிழ்நாடு

வெள்ளியங்கிரி மலையில் தவெக கொடி!

வெள்ளியங்கிரி மலையில் ஏற்றப்பட்ட தவெக கொடி தொடர்பாக...

DIN

கோவை: வெள்ளியங்கிரி மலை மீது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி ஏற்றப்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

கோவை வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மூன்று மணி நேரம் நடந்து சென்று இறைவனை வழிபடுவது வழக்கம்.

இந்த நிலையில் தவெக கட்சித் தொண்டர் ஒருவர் வெள்ளியங்கிரி ஏழாவது மலை மீது தமிழக வெற்றிக் கழக கட்சிக் கொடியை ஏற்றிவிட்டு வந்துள்ளார்.

தற்போது, இது தொடர்பான புகைப்படங்கள், விடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: இந்திய பங்குச் சந்தையில் ஒரு லட்சம் கோடி டாலர் நஷ்டம்! லாபத்தில் சீனா!

இதுகுறித்து ஆலாந்துறை போலீஸார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளியங்கிரி மலை மேல் தவெக கொடியை பறக்கவிட்டது யார்? யார் சென்றார்கள்? எப்போது கட்டப்பட்டது? என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

SCROLL FOR NEXT