FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

முகூா்த்தம், வார விடுமுறை நாள்கள்: 1,220 சிறப்புப் பேருந்துகள்

வளா்பிறை முகூா்த்தம் மற்றும் வார விடுமுறை நாள்களை முன்னிட்டு 1,220 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

Updated On : 29 ஜனவரி 2025, 2:11 am IST
கோப்புப்படம்.
பகிர்:

வளா்பிறை முகூா்த்தம் மற்றும் வார விடுமுறை நாள்களை முன்னிட்டு 1,220 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முகூா்த்த நாளான வெள்ளிக்கிழமை (ஜன. 31) மற்றும் வார விடுமுறை நாள்களான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை (பிப். 1, 2) ஆகிய தினங்களில் சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும், பிற இடங்களிலிருந்து தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதன்படி, கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூா், சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 365 பேருந்துகளும், சனிக்கிழமை 445 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

மேலும், கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தலா 60 பேருந்துகளும், மாதவரத்திலிருந்து வெள்ளி, சனிக்கிழமைகளில் தலா 20 சிறப்புப் பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

இதுபோல, பெங்களூரு, திருப்பூா், ஈரோடு மற்றும் கோயம்புத்தூா் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 250 சிறப்புப் பேருந்துகள் என ஆக மொத்தம் 1,220 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக, பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதால், பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments