சென்னை - தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு
தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
சென்னையில் இருந்து 70 பேருடன் ஸ்பைஸ்ஜெட் விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை தூத்துக்குடி புறப்பட்டது. விமானம் புறப்படும் போதே தொழில்நுட்ப கோளாறு ஓடுபாதையிலேயே கண்டறியப்பட்டது.
இதையடுத்து அந்த விமானம் உடனே நிறுத்தப்பட்டது. விமானத்தில் ஏற்பட்டுள்ள கோளாறை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
விமானியின் சாமர்த்தியத்தால் தொழில்நுட்ப கோளாறு முன்கூட்டியே கண்டறியப்பட்டதால் விமானத்தில் பயணிக்க இருந்த 70 பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
நிலைமை சீரானதும் விமானம் தாமதமாக புறப்படும் என ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த தாமதத்தால் விமான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
The departure of a SpiceJet flight from Chennai to Thoothukudi has been delayed due to a technical glitch.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.