FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஆக.4- இல் 47 அஞ்சலகங்கள் செயல்படாது

தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக தென்சென்னை கோட்டத்தில் உள்ள 47 அஞ்சலகங்கள் ஆக.4-ஆம் தேதி செயல்படாது என இந்திய அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 17 ஜூலை 2025, 12:01 am IST
கோப்புப் படம்
பகிர்:

தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக தென்சென்னை கோட்டத்தில் உள்ள 47 அஞ்சலகங்கள் ஆக.4-ஆம் தேதி செயல்படாது என இந்திய அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

எண்ம இந்தியா திட்டத்தின் அடிப்படையில் மேம்பட்ட அஞ்சல் தொழில்நுட்ப பயன்பாட்டை ஆக.5-ஆம் தேதி முதல் அஞ்சல் துறை அறிமுகம் செய்கிறது. தென் சென்னை கோட்டத்துக்கு உள்பட்ட 47 தபால் நிலையங்களில் இந்த மாற்றம் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.

புதிய மென்பொருள் மாற்றத்தைத் தடையற்ற முறையிலும் பாதுகாப்பாகவும் செயல்படுத்த, தென்சென்னை கோட்டத்துக்குள்பட்ட 47 அஞ்சலகங்களில் ஆக.4- ஆம் தேதி சேவைகள் நிறுத்தப்படுகின்றன. இதன் காரணமாக எந்த பொது பரிவா்த்தனைகளும் மேற்கொள்ளப்படாது என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments