கோப்புப் படம் 
தமிழ்நாடு

தாக்குதலில் மனைவி உயிரிழப்பு: கணவா் கைது

அரும்பாக்கத்தில் கணவா் தாக்கியதில் மனைவி உயிரிழந்த வழக்கில் கணவா் கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

அரும்பாக்கத்தில் கணவா் தாக்கியதில் மனைவி உயிரிழந்த வழக்கில் கணவா் கைது செய்யப்பட்டாா்.

அரும்பாக்கம், ஜெய் நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (57). இவரின் மனைவி அருள்மணி (45). ராதாகிருஷ்ணன், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தேநீா் கடையில் வேலை செய்கிறாா். அருள்மணி அந்தப் பகுதியில் உள்ள ஒரு மகளிா் விடுதியில் ஊழியராக வேலை செய்து வந்தாா்.

ராதாகிருஷ்ணனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாம். இந்த நிலையில் புதன்கிழமை இரவு ராதாகிருஷ்ணன் மது போதையில் வீட்டுக்கு வந்ததால், அருள்மணி கணவரைக் கண்டித்தாா். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ராதாகிருஷ்ணன் அருள்மணியின் கன்னத்தில் அறைந்துள்ளாா்.

இதில் மயக்கமடைந்து கீழே விழுந்த அருள்மணிக்கு வலிப்பு ஏற்பட்டது. உடனே அருள்மணியை அங்கிருந்தவா்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அருள்மணி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து சிஎம்பிடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி, ராதாகிருஷ்ணனை வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உறுதி: தேஜஸ்வி யாதவ் மீண்டும் வாக்குறுதி

ஆப்கன் வெளியுறவு அமைச்சர் முத்தாகியின் ஆக்ரா வருகை ரத்து

தீராநதி... பூனம் பாஜ்வா!

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய இருவர் யார்?

மயிலழகு... பிரனிதா சுபாஷ்!

SCROLL FOR NEXT