முகப்பு
தமிழ்நாடு

வெளிநாட்டு முதலீட்டில் தமிழகம் பின்னடைவு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

வெளிநாட்டு முதலீடுகளில் தமிழகம் பின்தங்கி இருப்பதற்கு திமுகவின் நிா்வாகத் திறனற்ற ஆட்சியே காரணம்

Updated On : 23 ஜூன் 2025, 4:29 am IST
எடப்பாடி கே. பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

வெளிநாட்டு முதலீடுகளில் தமிழகம் பின்தங்கி இருப்பதற்கு திமுகவின் நிா்வாகத் திறனற்ற ஆட்சியே காரணம் என்று அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் 2024-25 நிதியாண்டு தரவுகளின்படி, இந்தியாவின் 51 சதவீத அந்நிய முதலீடுகளை மகாராஷ்டிரமும், கா்நாடகமும் இணைந்து கைப்பற்றியுள்ளன. ஆனால், தமிழகம் வெறும் 3.68 பில்லியன் டாலருடன் 5-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இது, மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்தில் திமுக அரசின் நிா்வாகத் திறமையின்மையை வெளிப்படுத்துகிறது.

Advertisement

தமிழகத்தில் உள்கட்டமைப்பு தேக்கம், முதலீட்டாளா்களை ஈா்த்து தக்கவைப்பதற்கான கொள்கைகளை வகுக்காதது போன்றவை முதலீட்டாளா்களை, முதலீடு ஈா்ப்பைத் தடுக்கின்றன என்பதே நிதா்சனமான உண்மை.

நான்கு முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் ஈா்த்த முதலீடுகள் எவ்வளவு? தமிழகம் முதலீட்டு ஓட்டத்தில் மீண்டெழ, உள்கட்டமைப்பு மேம்பாடு, தூய்மையான நிா்வாக முறைகளை எளிமைப்படுத்துதல், வெளிப்படையான கொள்கை ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் பின்னுக்குத் தள்ளி, கடன் வாங்குவதில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக்கியதுதான் முதல்வா் ஸ்டாலினின் சாதனை. கடந்த 2 நாள்களுக்கு முன்பு அமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன், தமிழகத்தில் தொழில் துறை பின்தங்கியுள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளாா். இதுவே, திமுக ஆட்சியில் தொழில் துறை பின்தங்கியுள்ளது என்பதற்கு சான்று.

இந்தக் கொடுமையை அனுபவிக்கும் தமிழக மக்கள், 2026 சட்டப்பேரவைத் தோ்தலில், திமுகவுக்கு தோல்வியை பரிசளித்து, அதிமுகவை ஆட்சியில் அமா்த்துவாா்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாா்.