குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி!
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி பற்றி...
குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடந்த சில நாள்கள் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு மேல் அருவிகளில் நீர்வரத்து சற்று குறைந்ததால் மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Advertisement
Tourists have been allowed to bath at the courtallam Falls in tenkasi district