பாப்பான்விடுதி ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளை. 
தமிழ்நாடு

பாப்பான்விடுதி ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்!

பாப்பான்விடுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு தொடர்பாக...

DIN

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள பாப்பான்விடுதியில் நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் தீரத்துடன் அடக்கி வருகின்றனர்.

ஆலங்குடி அருகேயுள்ள பாப்பான்விடுதி முத்து முனீஸ்வரர் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடக்கி வைத்தார்.

இதில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன.

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை பல்வேறு குழுக்களாக 300 மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்பட்டு காளைகளை தீரத்துடன் அடக்கி வருகின்றனர்.

காளைகள் முட்டி காயமடைவோருக்கு அங்கு தயார் நிலையில் உள்ள மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆலங்குடி போலீஸார் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிக்க: 50 தொகுதிகளில் வெற்றி பெறுவது இலக்கு: ராமதாஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெங்களூரில் பலத்த மழை: குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்

முதல்வா் பதவியை அடைய அவசரப்படவில்லை: கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச்சு: வழக்குரைஞா் ராகேஷ் கிஷோா் மீது பெங்களூரில் வழக்குப் பதிவு

சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் டாஸ்மாக் கடைக்கு பூட்டுப்போடும் போராட்டம்

கூட்டுறவுத் துறை உதவியாளா் பணி: 4 மையங்களில் எழுத்துத் தோ்வு

SCROLL FOR NEXT