கனமழை எச்சரிக்கை! செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு
கனமழை எச்சரிக்கை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை: அடுத்து வரும் நாள்களில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 1200 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட அளவு 24 அடி என்ற நிலையில், தற்போது ஏரியின் நீர்மட்டம் 21.39 அடியாக உள்ளது. நீர் இருப்பு 3,645 மில்லியன் டன் அடியாக உள்ளது.
Advertisement
அடுத்து வரும் நாள்களில் கனமழை பெய்யலாம் என எச்சரிக்கப்பட்டிருப்பதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு அதிகரிக்கும் என்பதால், முன்னெச்சரிக்கையாக ஏரியில் இருந்து உபரிநீா் திறப்பு 1200 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.