அடுத்த 2 மணிநேரம் சென்னை, 9 மாவட்டங்களில் மழை!
அடுத்த 2 மணிநேரம் மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்...
தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரம் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல் ஆந்திரக் கடற்கரையை நோக்கி நகர்ந்தி வருகின்றது. இதனால், ஆந்திரம், ஒடிஸா மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில், பகல் 1 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களில் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
அதன்படி, செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மிதமான மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கோயம்புத்தூர், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Rain in Chennai and 9 districts for the next 2 hours
இதையும் படிக்க : நெருங்கும் மோந்தா புயல்! எப்படி இருக்கிறது ஆந்திரம்?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.