சரவணன் 
தமிழ்நாடு

ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர் சடலம்! கொலையா? தற்கொலையா?

ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலை உயர்நிலை மேம்பாலத்திற்கு கீழே இளைஞர் சடலம் மீட்கப்பட்டது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை உயர்நிலை மேம்பாலத்திற்குக் கீழே செவ்வாய்க்கிழமை காலை இளைஞர் ஒருவர் உயிரிழந்து கிடந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் - வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் உயர்நிலை மேம்பாலத்திற்குக் கீழே வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடப்பதாக நகர காவல் நிலைய காவல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல் துறையினர் இறந்தவரின் உடலை உடற்கூராய்வுக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் புது மண்டி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மகன் சரவணன் (38) என்றும், இவர் கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் சரவணனை யாரேனும் கொன்று பாலத்துக்கு கீழே போட்டுச் சென்றனாரா அல்லது அவர் தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து வழக்கு பதிந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Youth's body found in a blood on Ambur National Highway! Murder? Suicide?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட பெண் நக்சல் சரண்!

5,400 பேருக்கு வேலைவாய்ப்பு... 4 புதிய தொழிற்பேட்டைகள்: முதல்வர் திறந்து வைத்தார்!

15 புதிய பட்டுப் புடவைகளை அறிமுகப்படுத்தும் ஆரெம்கேவி!

10 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ரேஷ்மாவின் புதிய சீரியல்: ராமாயணம் தொடரின் நேரத்தை மாற்ற வேண்டாம் என கோரிக்கை!

SCROLL FOR NEXT