ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர் சடலம்! கொலையா? தற்கொலையா?
ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலை உயர்நிலை மேம்பாலத்திற்கு கீழே இளைஞர் சடலம் மீட்கப்பட்டது பற்றி...
ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை உயர்நிலை மேம்பாலத்திற்குக் கீழே செவ்வாய்க்கிழமை காலை இளைஞர் ஒருவர் உயிரிழந்து கிடந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் - வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் உயர்நிலை மேம்பாலத்திற்குக் கீழே வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடப்பதாக நகர காவல் நிலைய காவல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல் துறையினர் இறந்தவரின் உடலை உடற்கூராய்வுக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
Advertisement
Advertisement
முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் புது மண்டி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மகன் சரவணன் (38) என்றும், இவர் கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் சரவணனை யாரேனும் கொன்று பாலத்துக்கு கீழே போட்டுச் சென்றனாரா அல்லது அவர் தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து வழக்கு பதிந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Youth's body found in a blood on Ambur National Highway! Murder? Suicide?
இதையும் படிக்க : பரபரப்பான சூழலில் அமித் ஷாவை இன்று சந்திக்கும் இபிஎஸ்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.