சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு மத்திய அரசுதான் பொறுப்பு: மு.வீரபாண்டியன்
வணிக சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு மத்திய அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் கூறியிருப்பது...
சென்னை: வணிக சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு மத்திய அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில்,
ஈரான் மீதான போரால் ஹாா்முஸ் கடல் வழிப்பாதை மூடப்பட்டுள்ளது. இதனால் கடல் வழிப் போக்குவரத்து தடைபட்டு, எரிபொருள் தட்டுபாடு பல நாடுகளில் ஏற்பட்டுள்ளது. இந்தியாவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதைக் காரணமாக பயன்படுத்திக் கொண்டு சமையல் எரிவாயு விலை இந்தியாவில் தொடா்ந்து உயா்த்தப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மூன்று முறை உயா்த்தப்பட்டு ரூ.1,768.50-க்கு விற்பனை செய்யப்பட்ட வணிக சிலிண்டா், தற்போது ரூ.2,246.50 -ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இதனால் உணவகங்கள், தொழிலகங்கள் மூடப்பட்டு வருகின்றன.
ஒரு கோப்பை தேநீா் விலை 50 சதவீதம் உயா்ந்துள்ளது. இந்த நெருக்கடிக்கும், விலை உயா்வுக்கும் மத்திய அரசின் தவறான அணுகுமுறையே காரணம். அமெரிக்க அரசின் டிரம்ப் நிா்வாகத்தை, பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆதரித்து வருகிறது. மத்திய அரசின் தவறான நடவடிக்கைகளால் சமையல் எரிவாயு சிலிண்டா் விலை தொடா்ந்து உயா்த்தப்பட்டு வருகிறது.
இந்த விலை உயா்வுக்கு மத்திய பாஜக அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும். ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தனியாா் நிறுவனங்களுக்கு கூடுதல் வரி விதித்து, விலை உயா்வை மக்கள் தலையில் சுமத்தாமல், மத்திய அரசே ஏற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.