கட்சித் துண்டுடன் பதவியேற்க எல்.கே. சுதீஷுக்கு அனுமதி மறுப்பு!
கட்சித் துண்டுடன் பதவியேற்க எல்.கே. சுதீஷுக்கு அனுமதி மறுக்கப்பட்டது பற்றி...
தேமுதிக துண்டுடன் பதவியேற்க சென்ற எல்.கே. சுதீஷிடம் கட்சித் துண்டை கழற்றி வைத்துவிட்டு வருமாறு மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.
நாடு முழுவதும் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இன்று பதவியேற்றனர். தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திமுகவின் திருச்சி சிவா, ஜே. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸின் கிறிஸ்டோபா் திலக், தேமுதிகவின் எல்.கே.சுதீஷ், அதிமுகவின் தம்பிதுரை மற்றும் பாமகவின் அன்புமணி உள்ளிட்டோரும் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் கட்சித் துண்டு அணிந்து கலந்துகொண்ட எல்.கே. சுதீஷ் பதவியேற்க அழைத்தபோது துண்டை அணிந்தபடி சென்றார்.
Advertisement
அப்போது, கட்சித் துண்டை கழற்றி வைத்துவிட்டு வந்து பதவி ஏற்குமாறு மாநிலங்களவைத் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.
பதவியேற்ற பின்னர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் வாழ்த்து பெறச் சென்ற எல்.கே.சுதீஷ், பாக்கெட்டில் வைத்திருந்த விஜயகாந்த் புகைப்படத்தை எடுத்து அவையில் இருந்தவர்களிடம் காண்பித்தார்.