தமிழக பேரவைத் தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு!
தமிழக பேரவைத் தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு...
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக வருகிற ஏப். 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை ரத்து செய்யக்கோரி கே.கே. ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
Advertisement
தமிழகத்தில் இலவசங்களை லஞ்சமாக வழங்கி தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாகவும் வாக்களர்களுக்கு பணம், நகை, வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருள்களை வழங்குவதாகவும் இது அரசியல் சாசன விதிகளுக்கு மட்டுமின்றி தேர்தல் நடத்தை விதிகளுக்கும் இது எதிரானது என்றும் தனது மனுவில் கூறியுள்ளார்.
தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரான செயல்பாடுகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தமிழகத்தில் பேரவைத் தேர்தலை நிறுத்திவைக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.