நாகர்கோவிலில் பிரதமர் மோடி சாலை வலம்!
நாகர்கோவிலில் பிரதமர் மோடி சாலை வலம் மேற்கொண்டு வருவது குறித்து...
நாகர்கோவிலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி சாலை வலம் மேற்கொண்டு வருகிறார்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப். 15) கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு வந்தார்.
வேப்பமூடு சந்திப்பிலிருந்து சாலை வலமாகச் சென்று கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். வடசேரி எம்.ஜி.ஆர். சிலை வரை ஒன்றரை கி.மீ. தொலைவுக்கு சாலை வலம் மேற்கொள்ளவுள்ளார்.
Advertisement
சாலை இருபுறமும் அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் பிரதமர் மோடிக்கு கையெசைத்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
பூக்களைத் தூவி வரவேற்பளித்த மக்களைப் பார்த்து பிரமரும் பூரிப்பில் மகிழ்ந்துள்ளார்.
சாலை வலம் செல்லும் பிரதமர் மோடி வாகனத்தில் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நகேந்திரன், பொன். ராதாகிருஷ்ணன், அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.