திமுக 20 இடங்களில் வென்றாலே ஆச்சரியம்தான்: இபிஎஸ் பேச்சு
சேலத்தில் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி பேச்சு...
சேலம் மாவட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வரும் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
சேலம் மாவட்டம் தான் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பாமக தலைவர் அன்புமணி இந்த பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். சேலம் மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக மற்றும் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
Advertisement
பிரசார நிகழ்வில் பேசிய இபிஎஸ்,
"திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. போதைப்பொருள் கலாசாரம் அதிகரித்துள்ளது.
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது. அதுதான் இப்போது தமிழ்நாட்டில் நடக்கிறது.
ஒரு குடும்பம் பிழைக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 கோடி மக்களை வாட்டி வதைக்கின்றனர். 200 இடங்களில் வெல்வதாகக் கூறும் திமுகி 20 இடங்களில் வென்றால் ஆச்சரியம்தான்.
திமுக கூட்டணியில் சேர்ந்து அதிமுக கூட்டணிக்காக குரல் கொடுக்கும் பிரேமலதாவிற்கு நன்றி. உண்மை உறங்காது என்பதுபோல் எதிரிகளுடன் கைகோர்த்து நின்றாலும் பிரேமலதா மனதில் உள்ளதை பேசுகிறார்.
அதிமுக ஆட்சி மீண்டும் வந்ததும் போதைப்பொருள் இல்லா தமிழகம் உருவாக்கப்படும்.
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் 'போதையில்லா தமிழகம்' உருவாக்கப்படும்" என உறுதி அளித்தார்.