முகப்பு
தமிழ்நாடு

திருவண்ணாமலை சிறுமி பாலியல் வன்கொடுமை: மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை!

திருவண்ணாமலை சிறுமி பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக...

Updated On : 22 ஏப்ரல் 2026, 12:33 pm IST
கோப்புப் படம் - IANS
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக தேசிய மகளிர் நல ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 15 வயது சிறுமி 8 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், சிறுமி கூறிய இடங்களில் விசாரணை செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அது போன்று எதுவும் நடைபெறவில்லை என்று காவல்துறை கூறியுள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து விசாரணை அறிக்கையை 5 நாள்களுக்குள் வழங்க தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.

இதுபோன்ற கொடூர குற்றங்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம் என்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை என்பது மனித உரிமைகளின் மோசமான மீறல் என்றும் கூறியுள்ளது.

சிறுமி பாலியல் வன்கொடுமைக்குக் காரணமான குற்றவாளிகளைக் கைது செய்வதுடன் அந்த சிறுமி மற்றும் குடும்பத்தினருக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் மகளிர் ஆணையம் கூறியுள்ளது.

summary

Sexual Assault of Girl in Tiruvannamalai: Womens Commission Initiates Suo Motu Inquiry

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.