வாக்குச்சாவடிக்கு புறப்படும் முன் கவனிக்க வேண்டியவை!
வீட்டிலிருந்து வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு புறப்படும் முன் கவனிக்க வேண்டியவை குறித்து..
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.23 வியாழக்கிழமை நடைபெறவிருக்கிறது. வாக்காளர்கள், வாக்குச்சாவடிக்குச் செல்லும் முன் கவனிக்க வேண்டிய சில முக்கிய தகவல்கள் பற்றி..
வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடியை ecinet.eci.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக முன்கூட்டியே அறிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. உங்களுக்கு வேறு ஏதேனும் தகவல்கள் தெரிய வேண்டும் என்றால் 1950 என்ற எண்ணில் தொடர்புகொண்டு அறியலாம்.
வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் வாக்களிக்க செல்லும்போது கொண்டு செல்லலாம். இல்லாவிட்டால்
Advertisement
1. ஆதார் அட்டை
2. ஓட்டுநர் உரிமம்
3. பான் அட்டை
4. பாஸ்போர்ட்
5. வங்கி (அ) அஞ்சல் கணக்குப் புத்தகம்
6. ஓய்வூதிய சான்றிதழ்
7. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அடையாள அட்டை
8. சுகாதார காப்பீடு அட்டை
9. மத்திய, அரசு, பொதுத்துறை ஊழியர் அடையாள அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை வாக்களிக்க எடுத்துச் செல்லலாம்.