தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...
தமிழகத்தில் வாக்குப்பதிவு நிலவரம் பற்றி...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 56.81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் 234 பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று(ஏப். 23) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சுமார் 5.73 கோடி பேர் வாக்களிக்கின்றனர். மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
காலை முதலே மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
Advertisement
அதன்படி தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 17.69 சதவீதம், 11 மணி நிலவரப்படி 37.56 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 56.81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 62.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
மாவட்டவாரியாக விவரம்... (சதவீதத்தில்)
அரியலூர் - 55.18
செங்கல்பட்டு - 56.28
சென்னை - 54.58
கோயம்புத்தூர் - 58.24
கடலூர் - 55.13
தருமபுரி - 59.02
திண்டுக்கல் - 59.79
ஈரோடு - 61.79
கள்ளக்குறிச்சி - 57.15
காஞ்சிபுரம் - 58.98
கன்னியாகுமரி - 50.35
கரூர் - 60.77
கிருஷ்ணகிரி - 56.21
மதுரை - 54.75
மயிலாடுதுறை - 53.59
நாகப்பட்டினம் - 57.07
நாமக்கல் - 62.51
நீலகிரி - 50.42
பெரம்பலூர் - 57.55
புதுக்கோட்டை - 56.78
ராமநாதபுரம் - 51.54
ராணிப்பேட்டை - 58.62
சேலம் - 61.42
சிவகங்கை - 53.50
தென்காசி - 54.24
தஞ்சாவூர் - 54.83
தேனி - 55.63
தூத்துக்குடி - 52.55
திருச்சிராப்பள்ளி - 57.66
திருநெல்வேலி - 50.73
திருப்பத்தூர் - 57.42
திருப்பூர் - 62.97
திருவள்ளூர் - 55.45
திருவண்ணாமலை - 58.23
திருவாரூர் - 56.00
வேலூர் - 57.49
விழுப்புரம் - 58.23
விருதுநகர் - 57.27