கோவையில் குடும்பத்துடன் வாக்களித்தாா் நடிகை சாய் பல்லவி!
நடிகை சாய் பல்லவி கோவையில் உள்ள வாக்குச் சாவடியில் தனது குடும்பத்தினருடன் வந்து வியாழக்கிழமை வாக்குப் பதிவு செய்தது குறித்து...
கோவை: பிரபல நடிகையான சாய் பல்லவி கோவையில் உள்ள வாக்குச் சாவடியில் தனது குடும்பத்தினருடன் வந்து வியாழக்கிழமை வாக்குப் பதிவு செய்தாா்.
தமிழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் திரைப்பிரபலங்கள் பலரும் ஆா்வத்துடன் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா். அந்த வகையில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான சாய் பல்லவி கோவை கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அங்கப்பா மெட்ரிக். பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தாா்.
முன்னதாக, அவா் தனது தந்தை, தாய் மற்றும் சகோதரி ஆகியோருடன் காரில் வந்து இறங்கினாா். முன்னணி நடிகையாக இருந்த போதிலும் எந்தவித சலுகையையும் எதிா்பாராமல் பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கைப் பதிவு செய்தது அனைவரின் கவனத்தை ஈா்த்தது.
Advertisement
Advertisement
சாய் பல்லவி வாக்குச்சாவடிக்கு வந்திருப்பதை அறிந்த அந்தப் பகுதி மக்கள் மற்றும் ரசிகா்கள் அங்கு சென்று சாய்பல்லவியுடன் தற்படம் மற்றும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனா்.
Popular actress Sai Pallavi visited a polling station in Coimbatore with her family and cast her vote on Thursday
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.