மக்கள் பகல் 12 முதல் 3 மணி வரை வெளியில் வர வேண்டாம்!
தமிழ்நாட்டில் வெய்யில் காரணமாக மக்கள் பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்
கடுமையான வெய்யில் காரணமாக, மக்கள் அவசியமின்றி பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியிருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு சில வாரங்களாகவே கடுமையான வெப்பம் வாட்டி வருகிறது.
கடும் வெப்பம் காரணமாக பச்சிளம் குழந்தைகள் உடல்நிலை பாதிக்கப்படலாம். குறைவாக சிறுநீர் கழித்தாலோ அல்லது பால் குடிக்காமல் அழுதுகொண்டிருந்தாலோ உடனடியாக மருத்துவர்களை நாடவும் தாய்மார்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
Advertisement
வெய்யில் நேரத்தில் காபி, தேநீர் போன்ற சூடான பானங்களை அருந்துவதைத் தவிர்க்கவும் மக்களுக்குக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதுபோல, தர்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடலாம், பழச்சாறு, எலுமிச்சை சாறு போன்றவற்றை அருந்தலாம் என்றும் அறிவுறுத்தியிருக்கிறது.