முகப்பு
தமிழ்நாடு

கொதிக்கும் வெய்யில்.. நல்ல விஷயம் சொன்ன சென்னை வானிலை!

வெய்யில், கனமழை பற்றி வானிலை சொல்வதென்ன..

Updated On : 27 ஏப்ரல், 2026 at 3:23 PM
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் - DIN
பகிர்:

தமிழகத்தில் வெய்யில் அதிகரித்தாலும், ஏப்ரல் 30 முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட புறநகர் மாவட்டங்களில் பரவலாக வெய்யில் கொளுத்திவரும் நிலையில், ஏப். 29 வரை வெய்யில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.

அதேசமயம், சுமார் 0.9 கிமீ உயரத்தில், மத்திய பிரதேசத்தின் மத்திய பகுதிகள் முதல் குமரிக்கடல் வரை விதர்பா, உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

Advertisement

இதன் காரணமாக, இன்று முதல் ஏப். 29 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோரப்பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதோடு, ஏப். 30ல் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு. சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

மே 1, 2ல் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என வாயிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

summary

The Meteorological Department has stated that, despite the rising heat in Tamil Nadu, there is a possibility of heavy rainfall starting from April 30.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.