அதிகாரம் யாருக்கு? தமிழ்நாடு பேரவைத் தேர்தல் கருத்துக் கணிப்புகள் சொல்வதென்ன?
தமிழ்நாடு பேரவைத் தேர்தல் நிறைவு பெற்ற நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின.
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
நாட்டில் தமிழ்நாடு, புதுவை, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்களுக்கு பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
மேட்ரிஸ் வெளியிட்டிருக்கும் கருத்துக் கணிப்பில் திமுக தலைமையிலான கூட்டணி 122 - 132 இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது.
Advertisement
தமிழகத்தில் 85 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில், ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது குறித்து ஒவ்வொரு கருத்துக் கணிப்புகளும் சில வேறுபாடுகளுடன் முடிவுகளை வெளியிட்டு வருகின்றன.
summary