இரவு 10 மணி வரை சென்னை, 16 மாவட்டங்களில் மழை!
அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு...
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி வரை சென்னை உள்பட் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
''தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு (இரவு 10 மணி வரை) காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
Advertisement
Advertisement
இதேபோன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், கடலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது'' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
weather update Rain in Chennai and 16 districts until 10 PM
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.