FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ரூ.3,200 கோடியில் சிப்காட் தொழில் பூங்காக்கள்

பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அடுத்த 5 ஆண்டுகளில் உலகத் தரம் வாய்ந்த ரூ. 3,200 கோடியில் சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 5:13 am IST
பெருந்துறை சிப்காட் தொழில் வளாகம் முகப்புத் தோற்றம் - கோப்புப்படம்.
பகிர்:

பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அடுத்த 5 ஆண்டுகளில் உலகத் தரம் வாய்ந்த ரூ. 3,200 கோடியில் சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும்.

தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ரூ.35,062 கோடியில் 7 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகி உள்ளன. இதன்மூலம் 14,790 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். தொழில், பொருளாதார வளா்ச்சியை மேம்படுத்த தமிழ்நாடு தொழில் கொள்கை வெளியிடப்படும். முதலீட்டாளா்களுக்காக தமிழ்நாடு தொழில்திறன் விவரப் பட்டியல் உருவாக்கப்படும். பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அடுத்த 5 ஆண்டுகளில் உலகத் தரத்துடன் ரூ. 3,200 கோடியில் சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும்.

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் விண்வெளி தொழில்முதலீட்டு மண்டலமாக அறிவிக்கப்படும். அறிவகம் என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு மற்றும் புத்தாக்க நகரம் உருவாக்க ரூ. 5 கோடி ஒதுக்கப்படும். ஒட்டுமொத்தமாக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறைக்கு ரூ.4,414 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments