நடிகை சௌகார் ஜானகி மறைவு: முதல்வர் விஜய் இரங்கல்
நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி, உடல்நலக் குறைவால் இன்று காலமானார், அவரது மறைவுக்கு முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், இதய நோய்க்காக அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை சௌகார் ஜானகி சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார்.
செய்தி அறிந்து தமிழக முதல்வர் விஜய் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் இரங்கல் வெளியிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
முதல்வர் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், பழம்பெரும் திரைப்பட நடிகையும், தனது தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவருமான திருமதி சௌகார் ஜானகி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
திரைத்துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து, எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய அவரது கலைப்பணி என்றும் போற்றத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளதோடு, பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது, நந்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள திருமதி சௌகார் ஜானகி அவர்களின் மறைவு திரையுலகத்திற்கு பேரிழப்பாகும்.
திருமதி சௌகார் ஜானகி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
Demise of actress Sowcar Janaki: CM Vijay offers condolences
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.