புதுச்சேரி தவெக எம்எல்ஏ மீது வழக்கு!
திருபுவனை தவெக எம்எல்ஏ சாய் சரவணக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது பற்றி....
திருபுவனை தவெக எம்எல்ஏ சாய் சரவணக்குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி திருபுவனை தொழிற்பேட்டையில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலைக்குள் தனது ஆதரவாளர்களுடன் ஆய்வு செய்யச் சென்ற தவெக எம்எல்ஏ சாய் சரவணக்குமாருக்கும் தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனியார் நிறுவனத்தில் அத்துமீறி நுழைந்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சாய் சரவணக்குமார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Advertisement
Advertisement
கொலை மிரட்டல், அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
A case has been registered against Thirubuvanai TVK MLA Sai Saravanakumar.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.