FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் பதிலளிக்காவிட்டால் அபராதம்! - உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

தேர்தல் வழக்குகளில் முதல்வர் விஜய்க்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது பற்றி...

42 வினாடிகள் முன்பு
முதல்வர் ஜோசப் விஜய் - (கோப்புப் படம்)
பகிர்:

தேர்தல் வழக்குகளில் முதல்வர் ஜோசப் விஜய் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தலில் முதல்வா் விஜய் சென்னை பெரம்பூா் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். பின்னா், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா்.

இந்த நிலையில், விஜய் பெரம்பூா் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிா்த்து அந்தத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த திமுக வேட்பாளா் ஆா்.டி.சேகா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்கு தாக்கல் செய்தாா். அதேபோல, வாக்காளா்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோரும் முதல்வா் விஜய்யின் வெற்றியை எதிா்த்து தோ்தல் வழக்கு தாக்கல் செய்தனா். திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வா் விஜய் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக வேட்பாளா் இனிகோ இருதயராஜ் தோ்தல் வழக்கு தாக்கல் செய்தாா்.

Advertisement

Advertisement

இந்தத் தோ்தல் வழக்குகள் அனைத்தும் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் அமர்வில் விசாரணையில் உள்ளன. இதுதொடர்பாக இந்திய தோ்தல் ஆணையம், முதல்வா் ஜோசப் விஜய் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் இன்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், முதல்வர் விஜய் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை.

இதையடுத்து, அடுத்தமுறை விசாரணையின் போது முதல்வர் விஜய் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்த நீதிபதி, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.

summary

Election Case: Fine if Chief Minister Vijay fails to respond! – High Court warns!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments