வேலூர்: வெட்டுவானம் எல்லையம்மன் கோயிலில் மயங்கி விழுந்து பெண் பலி
வெட்டுவானம் எல்லையம்மன் கோயிலில் மயங்கி விழுந்து பெண் பலியானது பற்றி....
பள்ளிகொண்டா அடுத்துள்ள வெட்டுவானம் எல்லையம்மன் கோயிலில் மயங்கி விழுந்து பெண் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்துள்ள வெட்டுவானம் எல்லையம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்யச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த மற்றும் தற்போது காஞ்சிபுரத்தில் வசித்து வரும் மேகலா (65) கோயில் கொடி மரம் அருகே திடீரென மயங்கி விழுந்து பலியானார்.
முதற்கட்ட விசாரணையில் நெஞ்சுவலி காரணமாக பலியாகியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கோயிலில் பெண் பலியானதால் கோயில் நடை தற்காலிகமாக மூடப்பட்டு பரிகார பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
Advertisement
Advertisement
மேலும் சம்பவ இடத்துக்கு வந்த பள்ளிகொண்டா போலீஸார் உடலை மீட்டு குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
A woman collapsed and died at the Vettuvanam Ellaiyamman Temple near Pallikonda, causing widespread grief.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.