மாணவிகளுக்கு ரஜினிகாந்த் வசனத்தை மேற்கோள் காட்டிய முதல்வர் ஸ்டாலின்!
நடிகர் ரஜினிகாந்த் வசனத்தைச் சொல்லி மேற்கோள் காட்டிய முதல்வர்.
மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவிகளுக்கு ரஜினிகாந்த் வசனத்தைச் சொல்லி முதல்வர் ஸ்டாலின் மேற்கோள் காட்டினார்.
நடிகர் ரஜினிகாந்த்தின் படையப்பா படத்தில் இடம்பெற்ற, ‘கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது, கஷ்டப்படாம கிடைக்கிறது எதுவும் நிலைக்காது’ என்ற வசனத்தை மாணவிகளுக்கு முதல்வர் மேற்கோள் காட்டினார்.
சென்னை, நுங்கம்பாக்கம், கல்லூரி சாலை, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு இன்று(பிப். 10) பாராட்டு விழா நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ”எம்சிசி பள்ளியின் பழைய மாணவனாக, நான் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரிக்கு(WCC) நான் வந்திருக்கிறேன், நமக்குள் நன்றி சொல்லிக் கொள்ள தேவையில்லை.
என்னைப் பொறுத்தவரை பெண்கள் என்றாலே அழகுதான். அப்படிப்பட்ட பெண்களுக்கு அறிவுதான் உண்மையான அழகு. படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உலகிலேயே அழகான அணிகலன்.
வெற்றிக்கு குறுக்கு வழி கிடையாது. கடினமாக உழைத்தால்தான் ஜெயிக்க முடியும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டயலாக் ஒன்னு வரும். கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது, கஷ்டப்படாம கிடைக்கிறது எதுவும் நிலைக்காது.
தமிழ்நாட்டில் கல்விக்காக நாம் கொண்டுவந்த புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாணவிகள் பயனடைந்து வருவதைக் கண்டு நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
குறிப்பாக, இந்தத் திட்டத்தின் கீழ் பெண்கள் உயர் கல்வியில் சேருவது 34% உயர்ந்துள்ளது. புதுமைப் பெண்கள் திட்டத்தால் நகர்ப்புற மாணவிகளைக் காட்டிலும் கிராமப்புற மாணவிகள் அதிகம் பயனடைந்துள்ளனர். டிகிரியோடு நிறுத்தாமல் ஆராய்ச்சி படிப்பு வரை பெண்கள் படிக்க வேண்டும்.
புதுமைப்பெண திடடம் தொடர்பான ஆய்வின் முடிவைப் பார்த்து, நான் அடைந்த மகிழ்ச்சியை விவரிக்க முடியாது” என்றார்.
At a program held at the Women's Christian College, Chief Minister Stalin quoted a Rajinikanth quote to the students.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.