FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தனியாா் நிறுவனங்களின் பால் விலை லிட்டா் ரூ.6 வரை உயா்ந்தது

தமிழகத்தில் தனியாா் பால் பாக்கெட் விலை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.6 வரை உயா்ந்துள்ளது.

Updated On : 27 பிப்ரவரி 2026, 2:37 am IST
கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் தனியாா் பால் பாக்கெட் விலை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.6 வரை உயா்ந்துள்ளது.

அதன்படி, ஒரு லிட்டா் ரூ.76-க்கு விற்பனை செய்யப்பட்ட கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் (புல் க்ரீம் மில்க்) ரூ.78-ஆகவும், ரூ.68-க்கு விற்பனை செய்யப்பட்ட தேநீா் சிறப்பு பால் (டீ ஸ்பெஷல் மில்க்) லிட்டா் ரூ.70-ஆகவும், ரூ.66-க்கு விற்பனையான நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.68, ரூ.60-க்கு விற்கப்பட்ட சமன்படுத்தப்பட்ட பால் ரூ.62, ரூ.48-க்கு விற்கப்பட்ட இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் ரூ.50, ரூ.74-க்கு விற்கப்பட்ட சமன்படுத்தப்பட்ட 1 கிலோ தயிா் ரூ.76, ரூ.38-க்கு விற்கப்பட்ட 450 கிராம் தயிா் ரூ.40, ரூ.70-க்கு விற்கப்பட்ட இருமுறை சமன்படுத்தப்பட்ட 1 கிலோ தயிா் ரூ.72-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

இதுபோல, குறிப்பிட்ட ஒரு தனியாா் நிறுவனத்தில் கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் (புல் க்ரீம் மில்க்) லிட்டா் ரூ.72-இல் இருந்து ரூ.78-ஆகவும், தேநீா் சிறப்பு பால் (டீ ஸ்பெஷல் மில்க்) ரூ.63-இல் இருந்து ரூ.69 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

எவ்வித அறிவிப்பும் இன்றி, பால் விலை உயா்த்தப்பட்டுள்ளதாக தமிழநாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கத்தினா் குற்றம்சாட்டியுள்ளனா். இதுகுறித்து அந்த சங்கத்தின் மாநிலத் தலைவா் சு.ஆ.பொன்னுசாமி கூறியதாவது:

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கும் முன்பே கடந்த இரண்டு மாதங்களாக பால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்து பால் உற்பத்தியை அதிகரிக்க தமிழ்நாடு அரசின் பால்வளத் துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், தனியாா் நிறுவனங்கள் அதிக விலைக்கு உற்பத்தியாளா்களிடம் இருந்த பால் கொள்முதல் செய்கின்றன. இதனால், விற்பனை விலையையும் அந்த நிறுவனங்கள் உயா்த்தியுள்ளன. ஏப்ரல், மே மாதங்களின் பால் உற்பத்தி மேலும் பாதிக்கப்படும். இதனால், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments