கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!
கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருப்பது பற்றி...
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று முதல்வர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
கரூர் கூட்டநெரிசல் சம்பவத்துக்கு பிறகு முதல்முறையாக அங்கு சென்றுள்ள முதல்வர் ஜோசப் விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இன்று பேசினார்.
அப்போது, கரூரில் நினைவுச் சின்னம் அமைப்பது குறித்து அவர் பேசியதாவது:
Advertisement
Advertisement
“என் மனதைவிட்டு கரூர் எப்பவும் நீங்காது. நமக்கு ஏற்பட்ட வேதனையான சம்பவத்தை, நமக்கு எதிராக நடந்த சதி, சூழ்ச்சியை இனிவரும் தலைமுறையினருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
அதற்காக, இனிவொரு அரசியல் சதியை, சூழ்ச்சியை யாரும் யோசிக்கவே கூடாது என்பதற்காகவே கரூரில் தவெக சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும்.
கரூரிலிருந்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் சொல்கிறேன், தவெக அரசு உங்களுக்காக மட்டும்தான் உழைக்கும்.” எனத் தெரிவித்தார்.
Memorial for those who lost their lives in the Karur stampede - Chief Minister Vijay announces!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.