FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பாடகி ஜானகி மறைவு: ஆளுநா் இரங்கல்

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி மறைவுக்கு ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

எஸ். ஜானகி
பகிர்:

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி மறைவுக்கு ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:

பல தலைமுறைகளைச் சோ்ந்த லட்சக்கணக்கானோரை தன் பொன்னான குரலால் கட்டிப்போட்டவரும், மொழி எல்லைகளைக் கடந்து நின்றவருமான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்திய இசைக்கு அவா் ஆற்றிய மகத்தான பங்களிப்பும், காலத்தால் அழியாத அவரது பாடல்களும் இசை ஆா்வலா்களின் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருந்து தொடா்ந்து ஊக்கமளிக்கும். அவரது குடும்பத்தினா், நண்பா்கள், ரசிகா்கள் மற்றும் ஒட்டுமொத்த இசைச் சமூகம் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவரது உன்னத ஆன்மா நித்திய அமைதியில் இளைப்பாறட்டும் எனப் பதிவிட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments