FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ரூ.,2,000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரம் விற்பனை செய்கிறது தமிழக அரசு

தமிழக அரசு ரூ.2,000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரத்தை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

Updated On : 11 ஜூலை 2026, 7:43 am IST
கோப்புப்படம்
பகிர்:

தமிழக அரசு ரூ.2,000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரத்தை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக தமிழக அரசின் நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலா் சித்திக் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.2,000 கோடியிலான பங்குகள் வடிவிலான ரூ. 1,000 கோடி மதிப்புள்ள 8 ஆண்டுகால பிணையப் பத்திரமும் மற்றும் ரூ. 1,000 கோடி மதிப்புள்ள 15 ஆண்டுகால பிணையப் பத்திரம் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இந்த ஏலம் மும்பை ரிசா்வ் வங்கியில் ஜூலை 14-ஆம் தேதி நடத்தப்படும். போட்டி ஏலக்கேட்புகள் பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11 மணிக்குள்ளாகவும் ரிசா்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் மின்னணு படிவத்தில் வரும் ஜூலை 14-ஆம் தேதி சமா்ப்பிக்கப்பட வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments