உள்ளாட்சித் தேர்தலுக்கு தவெகவினர் தயாராக இருக்க வேண்டும்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்
உள்ளாட்சித் தேர்தல் பற்றி அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்திருப்பதாவது....
உள்ளாட்சித் தேர்தலுக்கு தவெகவினர் தயாராக இருக்க வேண்டும் என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகரில் தனியார் மண்டபம் ஒன்றில் தமிழக வெற்றி கழகத்தில் மாற்றுக் கட்சி வழக்கறிஞர்கள் இணையும் விழா தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் அமைச்சர் பேசுகையில், உள்ளாட்சித் தேர்தலில் தமிழக முழுவதும் தவெக நிர்வாகிகள் அனைத்து இடங்களிலும் நின்று மக்களின் பெருவாரியான ஆதரவோடு வெற்றி பெறுவார்கள். வெற்றி பெற்று அனைத்து தேவைகளையும் மக்களுக்காக செய்வார்கள்.
Advertisement
Advertisement
ஏற்கெனவே இருபது ஆண்டுகளாக மக்களோடு நமது நிர்வாகிகள் நலத்திட்ட உதவி செய்து வருகிறார்கள். 30 ஆண்டுகளாக பொதுவாழ்வில் பயணம் செய்தவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு கொடுத்தால் இன்னும் சிறப்பாக பயணிப்பார்கள்.
திமுக கவுன்சிலர்கள் அனைவரும் கவுன்சிலர் ஆவதற்கு முன்பு எவ்வளவு சொத்து வைத்திருந்தீர்கள். அதன் பிறகு எவ்வளவு சொத்து வைத்திருக்கிறீர்கள் என்று சொத்துப் பட்டியலை வெளியிட முடியுமா. ஒவ்வொரு சாலையோர கடைகளிலும் திமுக கவுன்சிலர்கள் வசூல் செய்கிறார்கள்.
ஆனால் மக்கள் முதல்வர் சொன்னதைப் போல யாருக்கும் எதுவும் லஞ்சம் கொடுக்காதீர்கள். விரைவில் எப்போது வேண்டுமானாலும் உள்ளாட்சித் தேர்தல் வரும். அனைவரும் தயாராக இருங்கள் என்று உரையை நிறைவு செய்தார். இவ்வாறு குறிப்பிட்டார்.
Minister CTR Nirmal Kumar has stated that TVK members should be prepared for the local body elections.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.