தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய ஆவின் திட்டம்!
பாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் ஆவின் தெரிவித்துள்ளது குறித்து...
பாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் ஆவின் நிர்வாகம் இன்று (ஜூலை 14) தெரிவித்துள்ளது.
கொடைக்கானல், ஊட்டி மலைப்பிரதேசங்களில் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த சோதனை முறையில் தானியங்கி இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகள் என். சதீஷ் குமார் மற்றும் டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் ஆவின் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
அதில், வாடிக்கையாளர்களின் வரவேற்பை மதிப்பிடுவதற்காக, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி ஆகிய இரு இடங்களில் சொதனை அடிப்படையில் தானியங்கி விற்பனை இயந்திரங்கள் நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ரூ.3.60 லட்சம் செலவில் 2 இயந்திரங்கள் வாங்கப்பட உள்ளதாகவும் 2 இயந்திரம் வாங்கி நிறுவிய பின் வீடுகள், உணவகங்களுக்கு பாக்கெட் பால் விற்பனை நிறுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Aavin to reintroduce ‘button paal’ system of selling milk through vending machine
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.